உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

முன்னாள் பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா வழக்குத் தொடர்பாக, வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மா மீது நியாயமான சுதந்திரமான விசாரணை நடத்திட உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அதுவரை அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என. கோரிக்கை விடுத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லித் தலைமையிலான அமர்வு, இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.