ஆளுநராக பொறுப்பேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்

தமிழக பா.ஜ.கவின் மூத்த தலைவராக செயல்பட்டு வந்த சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட்டின் புதிய அளுநராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 12ம் தேதி கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து பா.ஜ.கவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கடந்த 15ம் தேதி சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார். பின்னர் அவர் அளுநராக பொறுப்பேற்க ஜார்க்கண்ட் சென்றார். இந்நிலையில், ஜார்க்கண்டின் புதிய அளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். ஜார்க்கண்ட்டின் 11வது அளுநராக பொறுப்பேற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.