ஆரோக்ய மந்தன் 2022

ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் 4 ஆண்டுகள் நிறைவையும், ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் செயல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவையும் கொண்டாடும் வகையில் ஆரோக்ய மந்தன் 2022’ஐ, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா இன்று தொடங்கி வைக்கிறார். மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், டாக்டர். பாரதி பிரவீன் பவார், நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் மற்றும் அரசு உயரதிகாரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இரண்டு நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், தொழில்துறை, சுகாதாரத்துறை மற்றும் ஊடகத்தை சேர்ந்த வல்லுநர்களும் கலந்து கொள்கின்றனர். ஆயுஷ்மான் பாரத் மக்கள் ஆரோக்ய திட்டம் செப்டம்பர் 23 2022 அன்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்தது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் செப்டம்பர் 27 2022 அன்று முதலாண்டை நிறைவு செய்கிறது.