ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, தேர்தல்கமிஷன் துவங்கியுள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை சேகரிக்க உள்ளனர். ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிகள் நடப்பதால், அதை மையப்படுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு தேர்தல் ஆணையம் வினியோகித்து வருகிறது. அதில், வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளை அச்சிட்டுள்ளனர்.