’புதுச்சேரில 300 ரூபாய் கொடுத்தாச்சு , திமுக அரசு சொன்ன 100 ரூபாய் எங்கே?’

‘புதுச்சேரியில் இருக்குற பாஜக கூட்டணி அரசு சிலிண்டர்க்கு ரூ.300 மானியம் கொடுக்குறாங்களாம், இங்கேயும் தான் ஒரு அரசு இருக்கே’ என குடும்பத்தலைவிகள் திமுக அரசை நோக்கி சாபத்தை விட துவங்கிவிட்டனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஜெயிக்க  வாக்குறுதிகளை பிரதானமாக வைத்தது, மேலும் விளம்பரங்கள் நிறைய, நிகழ்ச்சிகள், தேர்தல் யுக்திகள் சமூக வலைதள பிரச்சாரங்கள் எனப் பல வியூகங்களை வைத்து, திமுக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதனை செய்கிறோம், இதனை செய்கிறோம் எனவும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என கூறாத குறையாக திமுக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியது.  505 தேர்தல் வாக்குறுதிகளில் பிரதான வாக்குறுதிகளாக குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய், பெட்ரோல், டீசல் விலையில் ஐந்து ரூபாய், மூன்று ரூபாய் விலை குறைப்பு, குடும்ப தலைவிகள் உபயோகப்படுத்தும் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறை என நிறைவேற்ற முடியாத ஆனால் அதே நேரத்தில் வாக்காளர்களை கவரும் வாக்குறுதிகளாக பிரமாதமாக அளித்து வந்தது. திமுக எந்த வாக்குறுதிகளை பிரதான வாக்குறுதிகளாக வைத்து தேர்தலை சந்தித்ததோ அதே வாக்குறுதிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தி வந்தது. இன்னும் சொல்லப்போனால் மக்கள் அந்த வாக்குறுதிகள் என்னாச்சு என கேட்கும் அளவிற்கு திமுக அதனை பற்றி எதுவும் மூச்சு விடவே இல்லை. சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்ற வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என திமுக தரப்பிலிருந்து இதுவரை சத்தமில்லாமல் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் புதுச்சேரியை ஆளும் பாஜக கூட்டணி அரசு புதுவை சட்டசபையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார் அதில் இந்த இரு திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாநில திட்டக்குழு கூட்டத்தை கூட்டி புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை ஒதுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்திருந்தது. . இதையடுத்து புதுச்சேரி சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்பொழுது புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.