எக்ஸ்ரே சேது

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன், பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தால் தன்னார்வ அமைப்பாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பப் பூங்கா (ஆர்ட்பார்க்), பெங்களூருவில் இயங்கும் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான நிரமை, இந்திய அறிவியல் கழகம் ஆகியவற்றுடன் இணைந்து வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் அதிகம் செறிவு இல்லாத மார்பு எக்ஸ்-ரே ஊடுகதிர் படங்களில், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளைக் கண்டறிவதற்காக எக்ஸ்ரே சேதுவை உருவாக்கியுள்ளது.இதனைப் பயன்படுத்துவதற்கு, www.xraysetu.com என்ற இணையதளத்தில் ‘Try the Free XraySetu Beta’ என்ற பொத்தானை மருத்துவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.இதைத்தொடர்ந்து அடுத்தக் கட்டமாக வாட்ஸ்அப் செயலியை அடிப்படையாகக் கொண்ட இணையம் வாயிலான தானியங்கி தகவல் பரிமாற்றம் அல்லது அலைபேசி செயலியை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.அல்லது +91 8046163838 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் எளிதாக எக்ஸ்ரே சேது சேவையைத் தொடங்கலாம்.பிறகு நோயாளியின் ஊடுகதிர் புகைப்படத்தைத் தேர்வு செய்து ஒரு சில நொடிகளில் விளக்கப் படங்களுடன் கூடிய இரண்டு பக்க தானியங்கி அறிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம்.மருத்துவர்கள் இந்த அறிக்கையை வைத்து நோயாளிக்கு தகுந்த அறிவுரை சொல்வார்கள்.இதுவரை பாரதத்தில் உள்ள கிராமங்களில் இதன் மூலம், சுமார் 1,200 பேர் பலன் பெற்றிருக்கின்றனர்.