மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது

சாகர் ராணா என்ற மல்யுத்த வீரரின் மரணத்திற்கு வழிவகுத்த சத்ராசல் ஸ்டேடியம் சண்டை தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சிறப்பு காவல்துறையால் டெல்லியில் கைது செய்யப்பட்டார். மாடல் டவுன் பகுதியில் சுஷிலுக்கு சம்பந்தப்பட்ட ஒரு வளாகத்தில் சாகர் தங்கியிருந்துள்ளார். வளாகத்தை காலி செய்யுமாறு சுஷில் அவரிடம் கேட்டுக் கொண்டும் சாகர் தனது நண்பர்களுடன் தொடர்ந்து அங்கேயே தங்கியிருந்தார். இதுதான் இவர்களின் இரு குழுக்களுக்கிடையேயான சண்டைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, சத்ராசல் ஸ்டேடியத்தில் அதிகாலை 2 மணியளவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அமித் மற்றும் சோனு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சாகர் மருத்துவமனையில் பலியானார். இதில் மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்த குற்றச்சாட்டை சுஷில் குமார் மறுத்துள்ளார்.