அதே இடத்தில் வழிபாடு

அசாமில் 250 ஆண்டுகள் வயதுடைய ஆலமரமும் 100 வருட பழமையான சிவலிங்கம், திரிசூலம் போன்றவை சில நாட்களுக்கு முன்பாக அங்குள்ள கிறிஸ்தவ மத வெறியர்களால் வெட்டி வீழ்த்தப்பட்டது. இதுகுறித்து ஹிந்து அமைப்புகள் புகார் அளித்துள்ளன. இந்நிலையில், தற்போது அதே இடத்தில் ஹிந்துக்கள் புதிதாக ஆலமரக்கன்று ஒன்றை நட்டு வைத்தனர். மேலும், சிவலிங்கத்தையும் சூலத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.