திறன் பயிற்சி திட்டத்தில் பெண்கள்

நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த திறன் வளர்த்தல் மற்றும் தொழில் முனைதல்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ‘சிறந்த பொருளாதார உற்பத்தி திறனை அடையும் இலக்கை நிறைவேற்ற நாம் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும். இந்நோக்கத்துடன், ஸ்கில் இந்தியா இயக்கத்தின் கீழ், உள்ளடக்கிய திறன் மேம்பாட்டில் அமைச்சகம் கவனம் செலுத்துகிறது. பிரதமரின் கௌஷல் விகாஸ் திட்டம், தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டம், ஜன் ஷிக்ஷன் சன்ஸ்தான், கைவினைத் திறன் பயிற்சி திட்டம் மற்றும் கைவினைப் பயிற்றுவிப்பாளர் பயிற்சி திட்டம் உள்ளிட்ட அதன் பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்கள் உட்பட அனைத்துப் பிரிவினருக்கும் அமைச்சகம் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளிக்கிறது. கௌஷல் விகாஸ் திட்டத்தில் பெண்களுக்கு போக்குவரத்து செலவு, தங்குமிட வசதிகளும் வழங்கப்படுகின்றன. கைவினைத்திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் 14,604 தொழில்துறை பயிற்சி நிறுவனங்களின் மூலம் நீண்ட கால தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. திறன் பயிற்சியில் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக தொழில் பயிற்சி நிறுவனங்களில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கைவினைப் பயிற்றுவிப்பாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ், கற்பித்தல் செயல்முறையை மேம்படுத்தும் கொள்கையை அரசு வகுத்துள்ளது. 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பெண்களுக்காக பிரத்யேகமாக 19 தேசிய திறன் பயிற்சி நிறுவனங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது’ என எடுத்துரைத்தார்.