ஆயுத படைகளில் பெண்கள்

டெல்லியில் கரியப்பா மைதானத்தில் என்.சி.சி படையினர் நிகழ்ச்சி கலந்துகொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘தேசமே முதன்மை என்ற எண்ணம் அனைவரிடமும் பரவ வேண்டும். நானும் என்.சி.சியின் உறுப்பினர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். என்.சி.சியை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இன்றைய என்.சி.சி பேரணியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இது,பாரதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை எடுத்து காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான என்.சி.சி படையினர் எல்லை பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆயுத படைகளில் பெண்களுக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் அதிகளவு பெண்கள் இணைய வேண்டும்’ என பேசினார். என்.சி.சி படையினரின் திறமைகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். சிறந்த வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.