தலிபான் ஆட்சியில் பெண்கள்

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒரு செய்தியில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் 15 முதல் 45 வயதான திருமணமாகாத, விதவைப் பெண்கள் குறித்த விவரங்கள் இமாம்கள் மூலம் சேகரிக்கப்படுகின்றன. அந்த பெண்களை திருமணம் எனும் பெயரில் அழைத்துச் சென்று பாலியல் அடிமைகளாகவும் புதிய ஜிஹாதிகளை உருவாக்கும் வகையில், குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் இயந்திரமாகவும் அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். போரில் ஒரு பயங்கரவாதி இறந்துவிட்டால் அவரது மனைவி கட்டாயமாக பாலியல் அடிமையாக்கப்படுகிறார். அவரது குழந்தைகள் அவரிடம் இருந்து பிரிக்கப்படுகின்றன. குழந்தை ஆணாக இருந்தால் ஜிஹாதி பயிற்சிக்கும் பெண்ணாக இருந்தால் விற்பனைக்கும் அனுப்பப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.