தப்பியோட சொல்லி மிரட்டியது யார்?

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூரில் அன்புஜோதி ஆசிரமம் என்ற கிறிஸ்தவ ஆசிரமம் செயல்பட்டு வந்தது. இங்கு முதியவர்கள், ஆதரவற்றோர் அன நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வந்தனர். இதனிடையே ஆசிரமத்தில் சிலர் காணாமல் போனதாகவும், பாலியல் அத்துமீறல் நடைபெறுவதாகவும் டார்க் ரூம் என சொல்லப்படும் மர்ம அறையில் வைத்து போதை மருந்துகள் கொடுத்து கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், இவ்வழக்கை சி.பி சி.ஐ.டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆசிரமத்தை நிர்வகித்து வந்த அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் உள்பட 9 பேர் கைதி செய்யப்பட்டனர். ஆசிரமத்தில் இருந்தவர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அரசு அங்கீகாரமுள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல, கடலூரில் உள்ள காப்பகம் ஒன்றில் 25 பேர் தங்கவைக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 4 பேர் கடந்த மாதம் காப்பகத்தில் இருந்து தப்பியோடினர். இந்நிலையில் மீண்டும் இந்த காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோடியுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட போர்வைகளை கிழித்து கயிறாக திரித்து பயன்படுத்தி மாடியில் இருந்து தப்பியோடி உள்ளனர். இவர்கள் ஏன் காப்பகத்தில் இருந்து தப்பியோடினார்கள், இவர்களை அங்கிருந்து தப்பியோட சொல்லி மிரட்டியது யார்? என்ற கோணத்தில் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.