யாருக்காக லஞ்சம் வாங்கினேன்?

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டு கவுன்சிலர் சத்தியசீலன்.இவர் தன்னுடைய வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வீடு கட்டுவதற்காக தடையில்லா சான்றிதழ் மற்றும் அதற்காக அனுமதி வழங்க ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.இது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில்வைரலானது.இந்த வீடியோ வெளியானதையடுத்து அவர் வெளிப்படையாக அந்த தவற்றை ஒப்புக்கொண்டுள்ளார். நான் லஞ்சம் வாங்கியது உண்மை, ஆனால் நான் யாருக்காக லஞ்சம் வாங்கினேன் என்பதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டும் என பேசியுள்ள அவர், தான் வாங்கிய பணத்தை நகரமன்றத் தலைவர் பரிமலா வாங்கஸ் சொன்னதாலேயே அதை வாங்கியதாகவும் நகரமன்றக் கூட்டத்திலேயே தெரிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அதுமட்டுமல்லாமல் தான் அந்த பணத்தை வாங்கிக் கொடுத்தததற்காக தனக்கு 5,000 ரூபாய் கமிஷன் தந்ததாகவும் சொல்லி மற்றொரு அதிர்ச்சி கொடுத்தார்.