விடியலை எதிர்பார்த்தோம் ஏமாற்றமே உள்ளது!

இடதுசாரி தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சியின் திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘விடியலை எதிர்பார்த்தோம்… ஏமாற்றமே உள்ளது! 10 சதவீதம் போனஸ், நான்கு ஆண்டு ஊதிய ஒப்பந்தம், அரியர் போன்றவை கிடையாது; ஓய்வூதிய பணப்பலன், பஞ்சப்படி உயர்வு தொடர்பான கோரிக்கை ஏற்கப்படவில்லை. தனியார் மயமாக்கும் நடவடிக்கை நடக்கிறது’ என தி.மு.க அரசின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும், கடைசி வரியில் ‘2024 தேர்தல் தொட்டுவிடும் துாரத்தில்’ என பகிரங்க எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனால், தி.மு.க தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.