புத்தகக் கண்காட்சியில் வீணான புத்தகங்கள்

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், “கரூரில் நடந்த புத்தகக் கண்காட்சியில் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கூறிய வழிமுறைகளைப் பின்பற்றாமல் அறிவாலய கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்ட பணியினால் அரசுக்கு 1.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல்லாயிரக் கணக்கான புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகி இருக்கின்றன. கமிஷனில், குறியாக இருக்கும் இந்த அறிவாலய அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யப் புத்தக விற்பனையாளர்களுக்குத் தகுந்த நஷ்ட ஈடு உடனடியாக வழங்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். விடியல் ஆட்சியில் லஞ்சம், லாவண்யம் தலைவிரித்து ஆடி வருவதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.