வாக்காளர் பட்டியல் இளைஞர்களுக்கு வாய்ப்பு

17 வயதிற்கு மேற்பட்டவர்கள் தற்போது முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க முடியும். முன்னதாக இருந்தது போல், 18 வயதை அடைபவர்கள் ஜனவரி முதல் தேதியை கணக்கில் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த புதிய அறிவிப்பின்படி, 2023 ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நாட்களில் 18 வயதை அடைபவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க முடியும். பெயர் சேர்த்தபின் அவர்களுக்கு புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும்.  வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ள புதிய விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதற்கு முன்பாக அளித்த பழைய விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படும். தற்போது உள்ள வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ‘6 பி’ என்ற புதிய விண்ணப்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை அளிக்காதவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். எந்தவொரு பதிவும் ரத்து செய்யப்படாது,  வாக்காளர்களின்  தகவல்கள், பொது வெளியில் வெளியிடவேண்டிய அவசியம் இருந்தால், ஆதார் விவரங்கள் வெளியிடப்படாது என்று  தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. 1.08.2022 முதல் தற்போது உள்ள வாக்காளர்கள் ஆதார் எண்ணை அளிக்கலாம் என்றும், இது முற்றிலும் சுயவிருப்பத்துடன் கட்டாயம் இல்லாமல், அளிக்கக்கூடியது என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.