25,000 தொலைத்தொடர்பு கோபுரங்கள்

“மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களின் டிஜிட்டல் இந்தியா தொடர்பான மூன்று நாள் மாநாடு” நிறைவடைந்தது. முதல் நாளில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னுரிமை அடிப்படையிலான முக்கிய அம்சங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்முயற்சிகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன. மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தொழில்நுட்ப அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “டிஜிட்டல் இந்தியா திட்டம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்றடையச் செய்வதில் தகவல் தொடர்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அடுத்த 500 நாட்களில் புதிதாக 25,000 தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவ 26,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் கதி சக்தி பெருந்திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் விரைவாக தங்களை இணைத்துக் கொண்டதற்கு வாழ்த்துகள். இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மூலதனச் செலவினங்களுக்காக மாநிலங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் வர்த்தகர்களை ஈர்க்கும் வகையில் அதற்கு உகந்த கொள்கைகளை வகுத்து செயல்படுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.