கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்துக! -விசுவ ஹிந்து பரிஷத்

உத்தரப் பிரதேசத்தில் வசிக்கும் வாய் பேச முடியாத, காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளியான பெண்ணையும், சிறுமியையும் கட்டாயப்படுத்தி இஸ்லாம் மதத்துக்கு மாற்ற முயற்சித்த செயல் நடந்துள்ளது. பாரதத்தில் மதமாற்றும் கும்பலின் செயல் எவ்வளவு தீவிரமடைந்துள்ளது என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. அப்பாவி மக்களை மூளை சலவை செய்து மதம் மாற்றி வந்த கும்பல், இப்போது மாற்றுத் திறனாளிகளையும் விட்டு வைக்கவில்லை என்பது அம்பலமாகியிருக்கிறது.

நொய்டாவில் வசிப்பவர் கள் உமர் கெளதம், ஜஹாங்கீர் ஆகியோர். பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேற்கண்ட இருவரையும் உத்தர பிரதேச மாநில காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்,ஐ. உளவு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவர்களிடம் நடத்திய விசாரணையில், இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோரை இவர்கள் கட்டாய மத மாற்றம் செய்துள்ளது.

இதற்காகவே நொய்டா ஜாமியா நகரில் இஸ்லாமிய தாவா சென்டர் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இங்குதான் மூளைச் சலவை செய்து மதமாற்றும் பணி நடக்கிறது. பணம், வேலை வாய்ப்பு, திருமணம் என ஆசைகாட்டி பெரிய கும்பல் ஒன்று இந்த வேலையை செய்து வருகிறது. உத்தர பிரதேசத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் அமலில் உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆகவே, இந்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும். மதமாற்றும் தீய சக்திகளுக்கு வெளிநாட்டில் இருந்து ஏராளமான பணம் வருகிறது. இதை முஸ்லிம் சமுதாயம் நியாயப்படுத்துவதுதான் கொடுமையான விஷயம். இந்த ஜிஹாதிகளுக்கு சட்டப் பாதுகாப்பு கொடுக்க பெரிய அளவில் பணம்கொடுத்து வாதாட வக்கீல்களும் முன்வருகின்றனர். பாரதத்தில் இஸ்லாம் காலடி வைத்த நாளிலிருந்தே இந்தக் கொடுமை அரங்கேறி வருகிறது. காலத்துக்கேற்ப தங்கள் மதமாற்றும் உத்தியை இவர்கள் மாற்றி வருகின்றனர். அண்மை காலமாக லவ் ஜிஹாத் என்ற கீழ்த்தரமான உத்தியைக் கையில் எடுத்துள்ளனர்.

கொரோனா என்ற கொடிய நோய் உலகையே உலுக்கி வரும் நிலையில் எத்தனையோ நல்ல உள்ளங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்ற சேவைப் பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் மதமாற்றும் மிஷனரிகளும் ஜிகாதிகளும் கொரோனாவைக் காட்டி அந்நிய நாட்டிலிருந்து உதவி என்ற பெயரில் ஏராளமான நிதியை இதையும் மதம் மாற்றும் செயலுக்கு பயன்படுத்தும் இழிசெயலைச் செய்து வருகின்றனர். இதற்கு டூல்கிட் கும்பல்களும் உடந்தையாக இருக்கின்றனர்.

இப்படிப்பட்ட மத மாற்றும் கும்பலின் நடவடிக்கைகளை விசுவ ஹிந்து பரிஷத் கடுமையாக எதிர்ப்பதுடன், இது குறித்து நியோகி கமிஷன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது. அத்துடன் நியோகி கமிஷன், வேணுகோபால் கமிஷன் பரிந்துரைத்த கட்டாய மத மாற்ற தடைச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும். பல சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளும் இதுவே. மதத்தின் பெயரால் பாரதம் பிளவுபடாமலிருக்கவும் மதம் மாற்றும் ஜிஹாதிகளின் பயங்கரவாதமும் தடுக்கப்பட வேண்டும். தேசவிரோத கும்பலை ஒடுக்க பாரத தேசம் நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான தருணம் இது.

விசுவ ஹிந்து பரிஷத் இணை பொதுச் செயலாளர்
டாக்டர் சுரேந்திர ஜெயின் அண்மையில்
வெளியிட்ட பத்திரிகை செய்தி.