விஜயபாரதம் தீபாவளி மலர் வெளியீட்டு விழா

விஜயபாரதம் வார இதழின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை, புரசைவாக்கம் 79, டாக்டர் அழகப்பா சாலையில் உள்ள சேவா காரியாலயத்தில் நடைபெற்றது. தீபாவளி மலரை மூத்த பத்திரிகையாளர் மாலன் வெளியிட்டார். முதல் பிரதியை அகில இந்திய வானொலியை சேர்ந்த சுதர்ஸன் பெற்றுக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்பாரத ஊடகத்துறை பொறுப்பாளர் ஜெ. ஸ்ரீராம் சிறப்புரையாற்றினார். இந்த வருட தீபாவளி மலர், ஹிந்துக்களின் குடும்ப அமைப்பு, உறவுமுறைகள், பாரம்பரியம், கலாச்சாரம், விழாக்கள் ஆகியவற்றின் மிக முக்கிய அடிநாதமாக விளங்கும் குலதெய்வ வழிபாட்டின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் வகையில் பல்வேறு அரிய தகவல்களுடன் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.