வி.ஹெச்.பி கோரிக்கை

திரிபுராவில் மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு பொய்யான செய்தியை திரிபுராவில் உள்ள முஸ்லிம்களும் இடதுசாரிகளும் திட்டமிட்டே பரப்பினர். இது பொய் என தெரிந்திருந்தும் இதனை சாக்கிட்டு அங்கு முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தமிழகம் மும்பை உட்பட பல இடங்களில் இந்த பொய்யை மேடை போட்டு பரப்பி அதில் குளிர் காய்ந்தன சில தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், ரசாக் அகாடமி உள்ளிட்ட பல முஸ்லிம் அமைப்புகள். இந்த பொய் செய்தியை சாக்கிட்டு மகாராஷ்டிராவில் நவம்பர் 12 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு, முஸ்லிம்கள் அங்குள்ள பல ஹிந்துக்களின் வீடுகள், வணிக நிறுவனங்களைத் தாக்கினர். ஹிந்துக்கள் மீதான இந்த கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, மும்பையில் இருந்து செயல்படும் பயங்கரவாத ஆதரவு அமைப்பான ராசா அகாடமி மற்றும் இதர பயங்கரவாத ஆதரவு அமைப்புகளை அரசு உடனடியாக தடை செய்யக் கோரிக்கை விடுத்தது. ராசா அகாடமி ஏற்கனவே பல ஹிந்து விரோத வன்முறைகளை தூண்டிய வரலாறு உள்ளது.  மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான ஆட்சி நடக்கும்போதுகூட ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் நடப்பது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்துள்ளது.