வி.ஹெச்.பி கண்டன ஆர்ப்பாட்டம்

நமது அண்டை நாடான வங்கதேசத்தில், ஹிந்துக்கள் மீதான ஜிஹாதிகளின் கொலைவெறி தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஹிந்து கோயில்கள் எரிப்பு, வழிபாட்டு பந்தல்கள் அழிப்பு, வீடுகளுக்கு தீ வைத்தல், சொத்துகள் சூறையாடல், பெண்கள் மீதான பலாத்கார தாக்குதல்கள் நடக்கின்றன. ஆனால், வங்கதேச அரசு கண்மூடி இருக்கிறது. இதனை கண்டித்தும், ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களை வங்கதேச அரசு உடனடியாக  தடுத்து நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், வன்முறையாளர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும், இதனைத் தடுக்க வங்கதேசத்திற்கு பாரதமும் உலக நாடுகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, பாரதம் தழுவிய அளவில் கண்டன ஆர்பாட்டத்தை நடத்துகிறது.