வேலா ஒப்படைப்பு

ப்ராஜக்ட் 75 திட்டத்தின் நான்காவது நீர்மூழ்கிக் கப்பலான யார்டு 11878 இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஸ்கார்ப்பியன் வகையைச் சேர்ந்த ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை கட்டுவது ப்ராஜக்ட்-75 திட்டம். இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், பிரான்ஸ் நாட்டின் நேவல் குரூப் ஒத்துழைப்புடன், மும்பை மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் தாயரிக்கப்பட்டு வருகின்றன.  “வேலா”  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பல், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே கடந்த 6, மே 2019 அன்று தனது சேவையைத் தொடங்கி அனைத்து பெரிய துறைமுகங்கள், ஆயுதம், சென்சார் ஒத்திகை உள்ளிட்ட அனைத்துக் கடல்வழி ஒத்திகைகளையும் நிறைவு செய்துள்ளது. இந்த வகையைச் சேர்ந்த மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பாரதத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இத்தகைய நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்படுவது ‘தற்சார்பு பாரதத்தை’ நோக்கிய மிகச்சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானம் மிகவும் சிக்கலானது. அனைத்து சாதனங்களையும் சிறிய அளவுடையதாக மாற்றி கடுமையான தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருப்பதால், இது மிகவும் சிரமமான பணியாகும்.