குப்பை வண்டியில் காய்கறி விநியோகம்

கொரோனா தொற்று மதுரையில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஆக்சிஜன் படுக்கை மற்றும் போதிய தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம், அ.தி.மு.க எம்எல்ஏக்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், ஐயப்பன் ஆகியோர் மனு அளித்தனர். பின்னர் செல்லூ ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து தமிழக அரசு கொரோனா தடுப்பூசிகளை கேட்டுப்பெற வேண்டும்.விலைவாசி மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.மாநகராட்சி குப்பை வண்டிகளை தூய்மைப்படுத்தி, அதன் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.இதனால், குப்பை வண்டிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன.குப்பை வண்டிகளில் காய்கறிகளை ஏற்றிச் சென்று விற்பனை செய்யப்படுவதால், மக்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, கவுன்சிலிங் வழங்க வேண்டும்.சத்து மாத்திரைகளை அனைத்து இடங்களிலும் வழங்க வேண்டும்’ எனக் கூறினார்.