திருவிழா குடைகளில் வீரசாவர்க்கர்

கேரளா மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோயிலில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பூரம் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான குடை மாற்றத்திற்காக விதவிதமான அலங்கரிக்கப்பட்ட குடைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில், மகாத்மா காந்தி, பகத் சிங், கேரளாவின் முக்கிய தலைவர்கள் உட்பட சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தன. அவ்வகையில், வீர சாவர்க்கரின் படமும் குடையில் இடம் பெற்றிருந்தது. குடையில் சாவர்க்கர் படம் இருப்பதற்கு அங்குள்ள காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.