ஆதார் இணைப்பிற்கு வி.சி.க எதிர்ப்பு

ஜி.எஸ்.டி-க்கு எதிர்ப்பு, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு, மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, என மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை எதிர்ப்பதையே தன் வேலையாக செய்துவரும் வி.சி.க தலைவர் திருமாவளவன், தற்போது ஆதார் எண்ணோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கவும் வழக்கம்போல எதிர்ப்புத் தெரிவித்து உள்ளார். கள்ள ஓட்டு போடுவதை தடுக்கவும், நேர்மையாக வாக்குப்பதிவு நடக்கவும், சட்டவிரோத குடியேறிகள் நமது தேசத்தின் அரசியலில் மூக்கை நுழைப்பதை தடுக்கவும் கொண்டுவரப்படும் இத்திட்டத்தை திருமாவளவன் எதிர்ப்பது அவரது உள்நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது என சமூக ஊடகத்தில் மக்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.