தரப்படாத விருதை திருப்பியளித்தார் வைரமுத்து

கேரள மாநிலத்தின் பெருமை மிக்க விருதுகளில் ஒன்றான ஓ.என்.வி விருதுக்கு வைரமுத்துவின் பெயர்பரிந்துரைக்கப்பட்டது.பாலியல் புகாரில் சிக்கிய அவருக்கு விருது தரப்படுவதை பலர் எதிர்த்தனர்.இதனால், விருது மறுபரிசீலனை செய்யப்படுவதாக ஓ.என்.வி அமைப்பு அறிவித்தது. எப்படியும் விருது கிடைக்காது என தெரிந்து, வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், அவ்விருதை திருப்பி அளிப்பதாகவும் அதற்குத் தரப்படும் 3 லட்சம் ரூபாயை கேரள முதல்வரின் நிவாரண நிதியில் சேர்த்து விடும்படியும் கூறியுள்ளார். ஆனால்,’ தனக்கு அளிக்கப்படாத விருதை வைரமுத்து எப்படி திருப்பி கொடுத்தார் என்பதுதான் புரியவில்லை’ என இணையதளவாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர்.