தடுப்பூசி சாதனை

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. உலகில் மிக வேகமாக தடுப்பூசி செலுத்தும் நாடாக தொடர்ந்து பாரதம் திகழ்கிறது. தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள மாநிலங்களில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், போதிய தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில், அதிகபட்சமாக 18 முதல் 44 வயதுக்குட்பட்டோருக்கு 39 சதவீத தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 34.5 சதவீதம் தடுப்பூசியும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 26.5 சதவீதமும் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.