நலத்திட்டங்களுக்கு தடுப்பூசி சான்றிதழ்

பல்வேறு உலக வெளிநாடுகளில் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே, மக்கள் அனைவரும் அலட்சியம் காட்டாமல் விரைவாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பல்வேறு நாடுகளும் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியுமா என்று கேள்வி எழுப்பிய நிலையில், அதை பாரதத்தில் நாம் சாதித்துக் காட்டியுள்ளோம். தடுப்பூசியில் 100 கோடியை தாண்டியுள்ளோம், இது ஒரு வரலாற்று சாதனை. தற்போது வெளிநாடுகளுக்கு செல்லவும், பல்வேறு வேலைகளுக்கும் தடுப்பூசி சான்றிதழ் கேட்கப்படுகிறது. வரும் காலங்களில் அரசு நலத்திட்டங்கள் பெற தடுப்பூசி சான்றிதழ் கேட்க வாய்ப்புள்ளது என புதுச்சேரியில் தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்து பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.