அமைச்சரின் நாகரீகமில்லா பேச்சு

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம், மணம்பூண்டி புது நகர் பகுதியில் புதிய பகுதிநேர நியாய விலை கடையை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது முகையூர் ஒன்றிய குழு தலைவரை அறிமுகப்படுத்தி பேசும் போது ‘நீ எஸ்.சி தானே’ என கேள்வி எழுப்பினார். அதற்கு ஒன்றியக்குழு தலைவியும் எழுந்து நின்று ‘ஆமாம் சார்’ என்று கூறிவிட்டு அமர்ந்தார். அமைச்சரின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க அமைச்சர் மேடையில் வைத்து பட்டியனினப் பெண்னை அவதூறாக பேசியதாக சமூக ஊடகங்களில் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.