அனுமதி பெறாத ஆட்சியர் அலுவலகம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, வீரசோழபுரம் என்னுமிடத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கோயில் நிலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டத் தடை கோரி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிய அனுமதி, ஒப்புதலைப் பெற்ற பிறகு கட்டுமானப் பணிகளைத் தொடர உத்தரவிட்டது. ஆனால், தற்போது, எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் தமிழக அரசுக்கு எதிராக ரங்கராஜன் நரசிம்மன், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இவ்வழக்குத் தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.