அனுமதியற்ற கிறிஸ்தவ ஆலயம்

மூங்கில்துறைப்பட்டு அருகே மோடங்கல் மலை உள்ளது. வனத்துறைக்கு சொந்தமான இந்த மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ஒருவர் முன் அனுமதி இல்லாமல் கிறிஸ்தவ ஆலயத்தை கட்டினார். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கட்டுமானப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்த தகவல் அறிந்து சங்கராபுரம் தாசில்தார், வருவாய் துறையினர், காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு கட்டுமான பணிகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.