உதய்பூர் கொலை வழக்கு

ராஜஸ்தானில் உதய்பூர் மாநிலத்தில் கன்னையா லால் என்ற ஹிந்து தையல் கடைக்காரர், முஸ்லிம் அடிப்படைவாதிகளால் கொடூரமாக தலை துண்டித்து கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ), ஃபர்ஹாத் முகமது ஷேக் என்பவரை கைது செய்துள்ளது.இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 7வது நபர் இவர். ஃபர்ஹாத் முகமது முக்கிய கொலையாளியான ரியாஸ் அட்டாரியின் நெருங்கிய கிரிமினல் கூட்டாளி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் 29.06.2022, 1.07.2022 மற்றும் 4.07.2022 ஆகிய தேதிகளில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.