முப்படை இணைப்பு யோசனை

மகாராஷ்டிரா, கடக்வசலாவில் உள்ள தேசிய ராணுவ பயிற்சி மையத்தில், 140வது பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் கடற்படைத் தளபதி கரம்பீர், ‘கடந்த காலத்தை விட, தற்போது போர்ச் சூழல் மாறி வருகிறது. நிலம், கடல், வான், கணினி என பலவற்றிலும் விழிப்புடன் இருப்பது முக்கியம். இதைக் கருதியே தரைப் படை, விமானப் படை, கடற்படை ஆகிய முப்படைகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் முப்படையினரின் கடல் பாதுகாப்பு படை அமைக்கப்பட உள்ளது. இது காலத்தின் கட்டாயம்’ என தெரிவித்தார்.