தேசதுரோகி கைது

முப்படைகளின் தலைமை தளபதியான பிபின் ராவத்தின் இறப்பு, தேசத்திற்கே பேரிழப்பு என்று அனைவரும் துக்கப்பட்டுக்கொண்டு இருக்கையில், ஒரு சில மதவெறியர்களும், தேசத்திற்கெதிரான துரோகிகளும் பிபின் ராவத்தின் மறைவை கொண்டாடி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜவாத் கான் என்ற இளைஞர், பிபின் ராவத்தின் இறப்பை கொண்டாடும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில்‘நரகத்திற்கு செல்லும் முன்பாக உயிரோடு எரிக்கப்பட்டு விட்டார்’ என கீழ்தரமான கருத்து தெரிவித்து இருந்தார். இதனையடுத்து ஜவாத் கானை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவரின் சமூக வலைதள கணக்குகளை ஆய்வு செய்த போது, அவர் தலிபான்களுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுபோல கருத்துகளை பதிவிட்டவர்களை கண்டுபிடித்து கைது செய்ய காவல்துறைக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் உத்தரவிட்டுள்ளார்.