ஹிந்து வர்த்தர்களுக்கு அச்சுறுத்தல்

பாகிஸ்தானின் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் குஜ்தார், வாத் சந்தையில் வர்த்தகம் செய்யும் ஹிந்து வர்த்தகரான அசோக் குமார் என்பவரை  முஸ்லிம் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள ஹிந்து கடைக்காரர்கள், தங்கள் கடையில் முஸ்லிம்களுக்கு வியாபாரம் செய்தால் கொல்லப்படுவர் என மிரட்டல் விடுத்ததுடன், அப்பகுதியில் அது குறித்த துண்டு பிரசுரங்களையும் ஒட்டிச்சென்றனர். அங்குள்ள ஹிந்து வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர் என ‘தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்’ செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் வன்முறைகள் அங்கு தொடர்கதையாகி வருகின்றன. அவர்கள் வழிபாட்டுத் தலங்கள் தாக்குதல்கள் நடக்கின்றன. அங்குள்ள சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் நிலை மிகவும் மோசமக உள்ளது.