நூல் வெளியீடு

வீர சாவர்க்கர் குறித்து விரிவாக ஆராய்ச்சி செய்து 2 மாபெரும் புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார் சரித்திர ஆய்வாளரும் எழுத்தாளருமான விக்ரம் சம்பத். அவர், நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் டாக்டர் மோகன் பாகவத்தை நேரில் சந்தித்து அவர் எழுதிய ஆங்கில நூலின் இரண்டாம் பாகம், ஹிந்தி, மராத்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள அந்நூலின் முதல் பாகங்களை வழங்கினார். வீர சாவர்க்கர் குறித்து மறைக்கப்பட்ட, திரித்து எழுதப்பட்ட கட்டுக்கதைகளை உடைத்து உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள மிக அற்புதமான ஆராய்ச்சி நூல் இது. ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல் இது.