மிரட்டும் திருணமுல்

மேற்கு வங்க சட்ட மன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் திருணமூல் காங்கிரசை சேர்ந்த பல தலைவர்கள் அதிலிருந்து வெளியேறி வருகின்றனர்.  கடந்த மாதம், சந்திபூரைச் சேர்ந்த முன்னாள் திருணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்திபூர் அரிந்தம் பட்டாச்சார்யா பா.ஜ.கவில் இணைந்தார். தற்போது திருணமூல் காங்கிரஸ் கட்சியினர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த மிரட்டல் கடிதத்தில் ‘சாந்திபூரை விட்டு 7 நாட்களுக்குள் வெளியேறவும் இல்லை என்றால் உங்கள் கொலைக்கு நீங்களே பொறுப்பாவீர்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மக்கள் இனி தங்கள் கட்சியை ஆதரிக்க மாட்டார்கள் என்பதை அறிந்த திருணமூல் கட்சி, தற்போது அரசியல்வாதிகள், மக்களை மிரட்ட ஆரம்பித்துள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று கூறிய பட்டாச்சார்யா, “இந்த சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றும் கூறினார்.