உண்மையை மறைக்கும் திருமாவளவன்

மதமாற்ற அழுத்தத்தால் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மதமாற்றம் ஏதும் நடக்கவில்லை, ஹிந்து அமைப்புகள்தான் வெறுப்புப் பிரசாரம் செய்கின்றன. தமிழக அரசு இதனை வேடிக்கை பார்க்ககூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று சொல்லியுள்ள விடுதலைக் கட்சிகள் தலைவர் திருமாவளவன், சனாதன சக்திகளை வேரறுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். சனாதன தர்மம் என்பது ஹிந்து தர்மம். எனவே, அவர் இதன் மூலம், ஹிந்து தர்மத்தை வேரறுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டே பெரும்பான்மையான மதத்தை அழிக்க வேண்டும் என இவர் பகிரங்கமாக பேசியிருப்பதற்கு மத்திய மாநில அரசுக்ள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் அவரது எம்.பி பதவியையும் பறிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.