கால் நனைக்காத திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் மழை வெள்ள சேதத்தை பார்வையிட சென்ற இடத்தில், தனது கால் மழை நீரில் படாமல் இருப்பதற்காக அங்கிருந்த பார்வையாளர்கள் அமரும் தொகுப்பு நாற்காலியில் நின்றுகொள்ள, அவரது நான்கு தொண்டர்கள் அதனை இழுத்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மழை நீரிலேயே கால் வைக்க தயங்கி தனது தொண்டர்களை வைத்து சவாரி செய்யும் இவர் எப்படி தனது மக்களின் வேதனைகளை புரிந்துகொள்வார் என அவரது கட்சிக்காரர்களே புலம்பி வருகின்றனர். முன்னதாக, பழவேற்காட்டில் ஆய்வுக்கு சென்றிருந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடல் நீரில் கால் வைக்க தயங்கி மீனவர் ஒருவர் தோளில் அமர்ந்து பயணித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.