இவர்கள் இப்படித்தான்

தடுப்பூசியை கேலி செய்தவர்கள் தற்போது தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் கிண்டல் செய்துள்ளார். முன்னாள் உ.பி  முதல்வர் அகிலேஷின் சொந்த ஊரான சைபையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்த முதல்வர் யோகி, தடுப்பூசி ஒத்திகையின்போது, இது பா.ஜ.கவின் தடுப்பூசி என அகிலேஷும் காங்கிரஸ் தலைவர்களும் கிண்டல் செய்தனர். ஆனால், அவர்கள்தான் இப்போது விரைவாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர் என தெரிவித்தார். கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என கூறப்படுவதால் அதைத் தடுக்கும் வகையில், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் அறிவித்தார். முன்னதாக தமிழகத்திலும், கொரோனா தடுப்பூசியை விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், உட்பட பலர் கிண்டல் செய்ததும், மக்களை பயமுறுத்தியதும் பிறகு அவர்களே ஊசி போட்டுக்கொண்டதும் தமிழர்கள் அறிந்ததே.