உலகம் தலைகீழாக போகிறது

கனடாவில் வசிக்கும் கேரளாவை சேர்ந்தவர் புகைப்பட கலைஞரான தாமஸ் விஜயன்.இவர் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தில் ஓராங்குட்டான் ஒன்று மரத்தை அணைத்தப்படி தலைகீழாக தொங்கிக்கொண்டு இருப்பதுபோல் இருக்கிறது.அதற்கு மேலே, மரத்தின் இலைகள், வானம் தெரிகின்றன.‘உலகம் தலைகீழாகப் போகிறது’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புகைப்படத்துக்கு நேச்சர் டி.டி.எல் என்ற சர்வதேச அமைப்பு 2021ம் ஆண்டுக்கான சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதை வழங்கியுள்ளது. இந்தப் புகைப்படம் பார்ப்பவரை ஒரு கணம் குழப்பத்துக்குள்ளாக்கும்.இந்த புகைப்படத்தில் ஒராங்குட்டான் தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பது போல் தோற்றம் தரும்.ஆனால், ஒராங்குட்டான் தலைக்கீழாக தொங்கவில்லை.மரத்தின் இலைகளும், வானமும் நீரில் பிரதிபலிக்கின்றன.போர்னியா தீவிற்கு சென்றபோது அவர் இதனை புகைப்படமாக்கியுள்ளார்.8,000 க்கு மேற்பட்ட படங்கள் இடம்பெற்ற அந்தப் போட்டியில், தாமஸ் விஜயனின் இந்தப் புகைப்படம் விருது பெற்றுள்ளது.1,500 பவுண்ட் விருதுத் தொகையாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.