வி.ஹெச்.பி போராட்டம் வெற்றி

பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு பஜ்ரங்தள் அமைப்பினர் கோயில் வாயிலில் கந்த சஷ்டி படித்து நூதன போராட்டம் நடத்தினர். மேலும், காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வாயிலை திறந்து பக்தர்களை அனுமதிக்க வழிவகை செய்தனர்.