வலதுசாரி ஆதரவாளர்கள், தேச நலன் விரும்பிகள் உள்ளிட்டோரின் புளு டிக்கை நீக்குதல், கணக்குகளை முடக்குதல் என செயல்பட்டு வரும் டுவிட்டர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) என்ற பயங்கரவாத ஆதரவு அமைப்பின் கர்நாடக கிளைக்கு ‘புளூ டிக்’ வழங்கியுள்ளது. பி.எப்.ஐ அமைப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, கறுப்புப் பண பரிவர்த்தனைகள், வெளிநாட்டுப் பண மோசடி, லவ் ஜிஹாத், பயங்கரவாத பயிற்சி என பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளது. சமீபத்தில்கூட, 200க்கும் அதிகமான தமிழகம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு இந்த அமைப்பு கேரள வனப்பகுதிகளில் ஆயுதப் பயிற்சி அளித்தது. இந்த அமைப்பை முடக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த நேரத்தில் அவர்களின் டுவிட்டர் கணக்கிற்கு ‘புளு டிக்’ வழங்கி தனது பாரதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது டுவிட்டர்.