முஸ்லிம் மதகுருவின் பேச்சு

கேரளாவை சேர்ந்த முஸ்லீம் மதகுரு சாலிஹ் பத்தேரி என்பவர், ‘இரவு 9 மணிக்குப் பிறகு வெளியே செல்லும் பெண்கள் விபச்சாரிகள். அவர்கள் கொல்லப்பட வேண்டும்’ என பேசியுள்ளார். பார்ப்பதற்கு ஒரு குழந்தையைப் போல தோற்றமளிக்கும் சாலிஹ்ஹின் உண்மை வயது 27. சௌமியா என்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கோவிந்தாசாமி என்பவர், நீதிமன்றத்தில், ‘சௌமியா இரவில் பயணம் செய்ததால் அவரை பாலியல் பலாத்காரம் செய்தேன்’ என கூறினார். இவரது கருத்தை சாலிஹ் பத்தேரி நியாயப்படுத்துவதுடன் அந்த வழக்கை விசாரித்த நீதிபதியையும் நீதிமன்றத்தையும் விமர்சித்தார். இந்த வைரல் வீடியோ கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சாலிஹ் பத்தேரியின் இந்த ஆட்சேபமான கருத்துகள் தொடர்பாக காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.