சாதனை படைத்தது புவனேஸ்வர்

ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் 18 வயதை கடந்த அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய சாதனையை நிகழ்த்திய முதல் நகரம் என்ற பெருமையை பெற்றது புவனேஷ்வர். இதுதவிர புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேருக்கு முதல் தவணை கோவிட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 100 சதவீதம் என்ற இலக்கை எட்ட நகரம் முழுதும் 30 ஆரம்ப சுகாதார நிலையங்கள்உட்பட 55 தடுப்பூசி மையங்கள், நடமாடும் தடுப்பூசி மையங்கள் நகரம் முழுதும் ஏற்படுத்தப்பட்டன என புவனேஷ்வர் மாநகராட்சி உதவி கமிஷனர் அன்ஷுமன் ராத் தெரிவித்தார்.