சிறுமியை துன்புறுத்திய காவலர் கைது

உத்தரப் பிரதேசம் லக்னோவில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் பள்ளி மாணவியை துன்புறுத்திய காவல்துறை அதிகாரி ஷஹாதத் அலி கைது செய்யப்பட்டார். ஷஹாதத் அலி, அந்த பள்ளி மாணவிக்கு அருகில் தனது ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து சென்று துன்புறுத்தும் வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் கடும் கோபமடைந்து, மைனர் சிறுமிகளை துன்புறுத்தி போலீஸ் சீருடையில் கறை படிந்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து லக்னோ காவல்துறை இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துறை ரீதியான நடவடிக்கையும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது என அறிக்கை வெளியிட்டது.