வன்முறைக்கு நிதியுதவி செய்தவர் கைது

உத்தரப்பிரதேசம் கான்பூரில்  கடந்த ஜூன் மாதத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் நிகழ்த்திய கொடூர வன்முறை சம்பவங்களுக்கு நிதியுதவி செய்த லக்னோவைச் சேர்ந்த ஹாஜி வாசி என்ற நபர் தலைமறைவாக இருந்தார். அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. காவல்துறை அவரை உ.பியிலும், டெல்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் தேடிவந்தனர். இந்நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, கான்பூர் மேம்பாட்டு ஆணையம், வாசியின் சொத்துக்களுக்கு சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.