தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

ராமநாதபுரம் கேணிக்கரை திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் பா.ஜ.க ஆதரவு அரசு மருத்துவர் மனோஜ்குமாரின் இரண்டு கார்களை தீ வைத்து எரிக்க முயன்ற வழக்கில் இபுராம்ஷா, அப்துல் ஹக்கீம், முகமது மன்சூர், அப்துல் அஜீஸ், அன்சார் ஆகிய ஐந்து முஸ்லிம் நபர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடியானதையடுத்து அதில் காருக்கு தீ வைத்ததில் நேரடியாக ஈடுபட்ட செய்யது இபுராம்ஷா அப்துல் அஜீஸ் ஆகிய இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியான அம்ஜத் அலியை கேணிக்கரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.