மோதலை தூண்டிய மசூதி

நுபுர் சர்மாவின் பேச்சுக்கு எதிராக ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள பதர்வா நகரில் மசூதி ஒன்றில் மோதலை தூண்டிவிடும் வகையிலான அறிவிப்பு அடங்கிய வீடியோ வெளியானது. இது சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது. சில முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் அங்கு குழுமி இருந்தவர்கள் சட்டவிரோதமான முறையில் ஹிந்துக்களுக்கு எதிரான கோஷங்களையும் மிரட்டல்களையும் எழுப்பினர். இதை அடுத்து அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்களும் வீதிகளில் இறங்கினர். தங்களுக்கு பாதுகாப்பு கேட்டும், கோஷம் எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் போராட்டம் நடத்தினர். பதற்றமான சூழல் நிலவியதால், அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இணைய சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. அத்துடன், பதர்வா காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு ராணுவம் வரவழைக்கப்பட்டு கொடி அணி வகுப்பு நடத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.