சீன ஆக்கிரமிப்பை ராணுவம் அனுமதிக்காது

டெல்லியில் நடந்த இந்தியா ஜப்பான் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சீன எல்லையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான ராணுவத்தை குவித்திருக்கிறோம். 2020ம் ஆண்டு முதல் எல்லையில் சீனா குவித்து வரும் படைகளுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பிரதமர் மோடி உத்தரவின் பேரில் இந்த படைக்குவிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.நாங்கள் சொன்னதால்தான் ராணுவம் அங்கு சென்றிருக்கிறது.ராகுல் காந்தி போகச் சொன்னதால் ராணுவம் அங்கு செல்லவில்லை.அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டுப் பகுதியில் நிலவும் இயல்பு நிலையை ஒருதலைப்பட்சமாக மாற்றும் எந்த முயற்சியையும் முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. எல்லையில் அத்துமீற எந்த நாட்டையும் அனுமதிக்க மாட்டோம் என்பது மத்திய அரசு மற்றும் இந்திய ராணுவத்தின் கடமையும் அர்ப்பணிப்புமாகும்” என்றார்.எல்லையில் நிலவும் இந்த பரபரப்பான சூழலில் சீனாவில் இருந்து ஏன் இறக்குமதிகள் அனுமதிக்கப்படுகின்றன?என்று கேள்வி எழுப்பப்படுகிறது.ஆனால் உற்பத்தித் துறையில் போதிய கவனம் செலுத்தாததால் அந்த நாட்டிலிருந்து நாம் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறோம்.கடந்த 30 ஆண்டுககுக்கும் மேலாக தொழிலுக்கு கொடுக்க வேண்டிய ஆதரவையும், பாதுகாப்பையும் நீங்கள் கொடுக்கவில்லை.இப்போதுதான் அதைச் செய்யத் தொடங்கியுள்ளோம்.30 ஆண்டுகளில் செய்ததை இப்போது 5 அல்லது 10 ஆண்டுகளில் மாற்ற முடியாது” கூறினார்.